இலங்கை செய்திகள்

இன்றைய தினம் மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..

இன்றைய தினம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05.30 மணி வரையான காலப்பகுதியில் 4 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மற்றும் மாலை 05.30 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 50 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button