இலங்கை செய்திகள்

மின் தடை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்..

மின் தடை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்..

இலங்கை முழுவதும் இன்று முதல் இரு தினங்களுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலயங்களின் அடிப்படையில் இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த வலயங்களில் பிற்பகல் 5 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது

Related Articles

Back to top button