இலங்கை செய்திகள்

இன்று மற்றும் நாளை மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

இன்று மற்றும் நாளை மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.

நாடளாவிய ரீதியில் இன்றும் மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகளவான மணிநேரம் மின்விநியோகத் தடையினை அமுல்படுத்த பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வலயங்களின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு மூன்று மணித்தியாலமும் 20 நிமிடமும் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, A முதல் W வரையான 20 வலயங்களில் முற்பகல் 9 மணி முதல் மாலை5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button