ஆன்மிகம்

இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் வந்தால் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் செல்வம் உங்கள் வீடு தேடி வரும்..

இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் வந்தால் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் செல்வம் உங்கள் வீடு தேடி வரும்..

எல்லா உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிர் தான் என்றாலும் அதனதனுடைய குணங்களை காண்பித்துக் கொண்டே தான் இருக்கும்.

கொட்டும் குணம் தேளுடையது போல ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு.

இந்த வகையில் எந்த உயிரினங்கள் நம் வீட்டிற்குள் வந்தால் நமக்கு அதிர்ஷ்டம் வரும்?

எந்த உயிரினங்கள் நம் வீட்டிற்குள் வந்தால் துரதிர்ஷ்டம் வரும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

வீட்டுக்குள் சிட்டு குருவி போன்ற உயிரினங்கள் வந்தால் எந்த காரணம் கொண்டும் அதனை விரட்டி விட கூடாது. சிட்டுக்குருவிகள் எளிதாக வீட்டிற்குள் வருவது இல்லை.

அப்படி வந்தால் அது அதிர்ஷ்டம் தரும் அறிகுறியாகவே எடுத்துக் கொள்ளலாம்.

சிட்டுக்குருவி இனங்களை அழித்து வரும் மனித சமுதாயம் விரைவில் அழிவுப்பாதைக்கு செல்லும் என்பதில் ஐயமில்லை!

சிட்டுக்குருவிகளின் வருகையை அதிர்ஷ்டம் தரக்கூடிய நாளாகக் கொண்டாடலாம்.

மகாலட்சுமியின் வாகனமாக இருக்கும் ஆந்தையை பலரும் வெறுப்பது உண்டு. அதனின் அகோரமான தோற்றம் காண்போரை முகம் சுளிக்க வைத்தாலும் லக்ஷ்மி தேவிக்கு அருகில் ஆந்தை இருப்பதை நாம் கவனித்திருக்க மாட்டோம்.

வட மாநிலங்களில் இருக்கும் அதிர்ஷ்ட லட்சுமி ஆந்தையை தன் வாகனமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஆந்தை தெரியாமல் உங்கள் வீடுகளில் நுழைந்தாலும் அதிர்ஷ்டம் வரப்போகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அதை விடுத்து அதனை அபசகுனமாக நினைக்க வேண்டாம். வீடுகளில் பாம்பு வருவது

பூரான் வருவது, ஆமை வருவது, தேள், விஷ பூச்சிகள் போன்றவை வருவது, காக்கை வருவது துரதிர்ஷ்டத்தை உண்டு பண்ணும்.

இவைகள் வருவது நல்ல சகுனம் அல்ல என்கிறது சகுன சாஸ்திரம்.

பொன் வண்டு, குளவி, கிளி போன்றவை நல்ல சகுணங்கள் தான்.

பெரும்பாலானோருக்கு வீட்டில் பல்லிகள் இருப்பது பிடிக்காது, உடனே அதனை அடித்து துரத்தி விடுவார்கள்.

ஆனால் பல்லி அதிர்ஷ்டம் தரும் ஒரு உயிரினமாகும்.

வீட்டில் ஒரு பல்லி கூட இல்லை என்றால் அந்த வீட்டில் பணமானது கரைந்து கொண்டே இருக்கும்.

வீண் செலவுகளும் எதிர்பாராத விரயங்களும் வரும்.

உங்களுடைய வீட்டின் பீரோவிற்கு பின்னால் பல்லிகள் இருப்பது கூடுதல் அதிர்ஷ்டம் கொடுக்கும்.

பணம் வைக்கும் பீரோவின் பின்னால் பல்லிகள் இருப்பது கூடிய விரைவில் செல்வ வளம் பெருக போவதை குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அதிர்ஷ்டம் தரும் பறவையினங்களில் புறா மிகவும் நன்மைகளை செய்யக் கூடியவையாக உள்ளன.

அழகிய புறாக்களுக்கு தானியம் இட்டு பாருங்கள். அடிக்கடி உங்களை தேடி அவைகள் வரத் துவங்கி விடும்.

அதன் வரத்து அதிகரிக்கும் பொழுது, உங்கள் வீட்டின் கஷ்ட நிலையானது மாறி செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

எனவே புறாக்கள் வளர்ப்பது, புறாக்களை வீட்டிற்கு வரவழைத்து தானியங்களை போடுவது, தண்ணீர் வைப்பது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது புண்ணியமும் நமக்கு சேரும்.

எந்த ஒரு உயிரினத்திற்கும் உணவு அளிப்பது, தண்ணீர் கொடுப்பது போன்ற விஷயங்களைச் செய்தால் எத்தகைய கர்மாக்கள் இருந்தாலும் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.

கர்ம வினைப்படி நாம் அனுபவிக்க வேண்டிய பாவங்களை அனுபவித்தாலும், இது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது அதிலிருந்து விமோசனத்தையும் பெற்றுக் கொள்ளலாம்

Related Articles

Back to top button