ஆன்மிகம்

உங்கள் வாழ்க்கையில் தீராத கஷ்டம் இருக்கிறதா? ஏலக்காயை பூஜை அறையில் வைத்து தினமும் இப்படி வழிபடுங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்து காணாமல் போய்விடும்.

உங்கள் வாழ்க்கையில் தீராத கஷ்டம் இருக்கிறதா? ஏலக்காயை பூஜை அறையில் வைத்து தினமும் இப்படி வழிபடுங்கள்.
உங்கள் கஷ்டங்கள் அனைத்து காணாமல் போய்விடும்.

உங்களுக்கு வாழ்க்கையில் தீராத கஷ்டம் இருக்கிறதா? தினம் தோறும் விநாயகர் வழிபாடு மிகவும் சிறந்தது. ஏனென்றால், விக்னங்களை தீர்ப்பவர் தான் விக்ன விநாயகர்.

உங்கள் வீட்டில் தினந்தோறும் இரண்டு ஏலக்காய்களை, விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியமாக வைத்து, தீபம் ஏற்றி மனதார வழிபட்டு வந்தால், எப்படிப்பட்ட பிரச்சினையும், வந்த வழி தெரியாமல் சென்றுவிடும்.

இது மிக மிக சுலபமான பரிகாரம். இது செஞ்சா பிரச்சினை எல்லாம் போய் விடுமா! என்ற சந்தேகத்தோடு மட்டும் வழிபாடு செய்யாதீர்கள்.

நம்பிக்கையோடு செய்து பாருங்கள்! உங்களை விட்டு அந்தப் பிரச்சனை எப்படித்தான் சென்றது என்றே தெரியாது. ஆனால் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபட்டு விடுவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையடுத்து, தீர்க்க முடியாத கடன் பிரச்சனை இருந்தால், செவ்வாய்க்கிழமை அன்று பின்வரும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதுவும் விநாயகரை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம் தான். திங்கட்கிழமையே உங்களது வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கட்டாயம் அசைவம் சாப்பிடக்கூடாது. உங்கள் வீட்டில் தோரண கணபதி படம் இருந்தால் இன்னும் சிறப்பு. செலவோடு செலவாக சின்ன தோரண கணபதி படத்தையும் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இதுமட்டுமல்லாமல், தினம் தோறும் வீட்டில் இறைவனுக்கு ஏதாவது ஒரு பொருளை நைவேத்தியமாக படைத்து, அதன் பின்பு தீபம் ஏற்றும் பழக்கம் உள்ளவர்கள், குறிப்பாக பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, டைமண்ட் கற்கண்டு, பேரிச்சம்பழம் இந்த பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

இந்த பொருட்களை எல்லாம் இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்தால், நமக்கு வாழ்க்கையின் நிறைவான செல்வவளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button