ஆன்மிகம்

குபேரரை இப்படி வழிபட்டால் உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம் நீங்கும். அப்புறம் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம், செல்வம் உங்கள் வீடு தேடி வரும்..

குபேரரை இப்படி வழிபட்டால் உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டம் நீங்கும்.
அப்புறம் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம், செல்வம் உங்கள் வீடு தேடி வரும்..

பணக்காரர் ஆகவேண்டும் மகாலட்சுமியின் அருள் வீட்டிற்குள் வரவேண்டும்,

குபேரன் அருள் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். கோடீஸ்வரர் ஆகவும் குபேரனின் அருள் கிடைக்க

வெள்ளிக்கிழமைகளில் வீட்டிற்குத் தேவையாக கல் உப்பு வாங்குங்கள் விதம் விதமாக ஊறுகாய் வாங்கி வையுங்கள் குபேரன் அருள் நிச்சயம் கிடைக்கும்.

குபேரருக்குரிய திசை வடக்கு. தொழில், வியாபார இடங்களிலும்,

வீட்டிலும் பணப்பெட்டியை வடக்குநோக்கி வைப்பது சிறப்பு.

குபேரரின் அருளால் தொழிலில் லாபமும், செல்வ வளமும் பெருகும்.

புதன்கிழமை சிறப்பானது. பச்சை நிறம், பாசிப்பயறு குபேரனுக்கு பிடித்தமானது. குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார்.

செல்வ செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள் உருவாகும்.

விஷ ஜந்துகளை கீரி விரட்டுவது போல, பணகஷ்டத்தால் நமக்கு வரும் இடையூறுகளை நீக்குவதை குறிக்கும் விதத்தில் கீரியை தாங்கியிருக்கிறார் குபேரர்.

தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதமும் வரும் திங்கள் கிழமையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோடீஸ்வரர் ஆகலாம்.

பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.

அருகம்புல் அர்ச்சனை.

கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமையில் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும். பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.

வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்ய தனலாபம் கிடைக்கும்.

குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும். வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண்ட் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை,

சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.

பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் நன்மைகள் நடக்கும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது.

பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும். வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. அப்படி வெளியேறினால் பணமும் வெளியேறி விடும்.

பகல் 12 மணியளவில் அபிஜித் நட்சத்திரத்தில் திருநங்கைக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை பசுவிற்கும் பறவைக்கும் அளித்திட பணத்தடை நீங்கும்.

பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும். பணப் பிரச்சனை தீரும்.

சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது.

மென்மையான இழைகளால் ஆன அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். இதனால் தான் சித்திரை முதல் நாள், சித்ரா பவுர்ணமி, அட்சய திரிதியை நாட்களில் வெல்லம் அல்லது கருப்பட்டி பாகுடன் சேர்த்த அவல் சாப்பிடும் பழக்கம் உள்ளது.

தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள்.

குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம். ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.

கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும். மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.

சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும். மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.

வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.

வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன் முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையாவது முதலில் பார்த்து விட வேண்டும்.

தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.

குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும். ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.

துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.

ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்ச்சனை செய்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ,

தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்கு சேர வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக் கொடுக்கலாம்.

Related Articles

Back to top button