இலங்கை செய்திகள்

ஏரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்.

ஏரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்.

இன்றைய தினமும் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 12 தசம் 5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2 தசம் 3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இன்றைய தினம் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 ஆம் திகதி முதல் லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button