Uncategorizedஇலங்கை செய்திகள்

இலங்கையில் தலைசுற்ற வைக்கும் போன் விலை.

இலங்கையில் தலைசுற்ற வைக்கும் போன் விலை.

தொலைபேசிகளின் விலைகள் அசுர வேகத்தில் உயர்ந்து வருவதால் இலங்கையர்கள் தொலைபேசி கொள்வனவினை தவிர்த்து வருவதாக ஆய்வொன்றை மேற்கோள்காட்டிய தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக பல கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், விற்பனை ஏதும் இல்லாமல் சில தொலைபேசி விற்பனை நிலையங்கள் காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

இது ஒருபுறமிருக்க, ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் குறைந்தபட்ச விலை எண்பதாயிரம் ரூபா என்ற வரம்பில் உள்ளது.

அரசாங்கம் விதித்துள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளாலும், சமீபகாலமாக வரி உயர்வாலும் தொலைபேசிகளின் குறைந்தபட்ச விலை 90,000 என்ற வரம்பை விரைவில் எட்டும் என விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலங்களில் சுமார் 20,000 ரூபாவாக இருந்த ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றின் விலை தற்போது 50,000 ரூபாவை தாண்டியுள்ளதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Articles

Back to top button