Uncategorized

உங்கள் கண்பார்வை அதிகரிக்கும் 7 நாட்களில் உங்கள் கண்ணாடிகள் தூக்கி எறியுங்கள்..!

உங்கள் கண்பார்வை அதிகரிக்கும் 7 நாட்களில் உங்கள் கண்ணாடிகள் தூக்கி எறியுங்கள்..!

உங்கள் கண்பார்வை அதிகரிக்கும் 7 நாட்களில் உங்கள் கண்ணாடிகள் தூக்கி எறியுங்கள்..!

மொபைல், கம்ப்யூட்டர், டி.வி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். மொபைல் மற்றும் கம்ப்யூட்டரின் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் இவற்றைப் பார்க்கக் கூடாது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத்திறனை பாதுகாக்கலாம்.7 – 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது, இரவு 11 மணி முதல் நள்ளிரவு 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.

இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும். தினசரி, இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண்சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.

பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை பயிற்சிசெய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும். இதுபோன்ற கண் பயிற்சிகள், பார்வைத்திறனை மேம்படுத்தும்.தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.

தூங்கி எழுந்ததும், கண் ரப்பையைச் சுற்றிலும், புருவத்தின் கீழ்ப்பகுதி, புருவத்தின் மேல் பகுதி, நெற்றிப் பொட்டு ஆகிய இடங்களில் ஆள்காட்டி விரலைவைத்து, மெதுவாக, மென்மையாக கடிகார முள் சுழற்சி பாதை, அதற்கு எதிரான பாதையில் (க்ளாக் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸாக) சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இவை கண்களுக்குள் சீரான ரத்த ஓட்டத்தைப் பாயச் செய்கிறது. கண்களின் வறட்சித் தன்மையைப் போக்குகிறது.வெளியில் செல்லும்போது கூலிங் கண்ணாடி அணியலாம். இவை தூசு, புகை மற்றும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களைக் காக்கிறது. மலிவுவிலையில் விற்கப்படும் சாலையோர கண்ணாடிகளை வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், ஆரஞ்சு, மீன், முட்டை, புரோகோலி, தக்காளி, அடர்பச்சை நிறக் காய்கறிகள், ஆளி விதைகள், வெள்ளரி, பாதாம், வால்நட் ஆகியவை பார்வைத் திறனை மேம்படுத்தும் உணவுகள்.ஒரு மண்டலம் என 48 நாள் கணக்கில் கேரட்டை ஏதாவது ஒரு வகையில் தினமும் சாப்பிட்டுவரலாம். அதேபோல பொன்னாங்கண்ணிக் கீரையை கூட்டு, பொரியல், துவையல் என 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவருவது பார்வைத் திறனை மட்டுமல்ல, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தில் கண்ணாடி அணியாதவர்கள் மிகமிக குறைவு என்றாகிவிட்டது. இன்றைய வாழ்க்கை சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணிய வேண்டிய நிலை உண்டாகிறது. கண்பார்வையை தெளிவாக வைக்க தினசரி சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.உங்களது அன்றாட வாழ்க்கையில் பச்சை காய்கறிகள், கேரட், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். ஆனால் நாம் இப்போது எல்லாம் ஜங்க் உணவுகளுக்கு அடிமையாகிவிட்டோம். இதனால் தான் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாகின்றன.

நீங்கள் கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக உங்களது கண் பார்வையை தெளிவாக்கலாம். இந்த பகுதியில் கண் பார்வையை அதிகரிக்க கூடிய சில வகையான உணவுகளையும், நாட்டு மருத்துவ முறைகளையும் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

Related Articles

Back to top button