ஆன்மிகம்

உங்களுடைய பர்ஸில் எப்போதும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக நிரம்பி வழியனுமா? இத மட்டும் செய்யுங்க..!

உங்களுடைய பர்ஸில் எப்போதும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக நிரம்பி வழியனுமா?
இத மட்டும் செய்யுங்க..!

நம்முடைய பர்ஸில் எப்போதும் பணம் இருக்க சில காரியங்களை மட்டும் செய்தால் போதும்.

குறிப்பாக ஒரு ரூபாய் நாணயமும், இருபது ரூபாய் நோட்டும் அவசியம் இருக்கவேண்டும்.

இந்த இரண்டையும் எப்போதும் செலவழிக்கவே கூடாது. என்னதான் தவிர்க்க முடியாத சூழ்நிலையாக இருந்தாலும் கூட அதை எடுத்து செலவழிக்கவே கூடாது.

பர்ஸில் வைக்கக்கூடிய வகையில் ஒரு சிறிய அளவில் பச்சை பட்டுத் துணி அல்லது ஒரு பச்சை காகிதத்தில் ஐந்து ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டு பர்ஸில் வைத்துக்கொள்வது அவசியம்.

பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் ஏலக்காய்களை வைத்து கட்டி அதை பர்ஸில் வைத்துக்கொண்டால், பணம் அநாவசியமாக செலவாகாது.

நம்மில் பெரும்பாலானவர்கள் பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள்.

மாதச்சம்பளம் வாங்குபவர்களில் வெகு சிலர் மட்டுமே பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை விடாமல் தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள்.

மற்றவர்கள் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கமே இல்லாதவர்கள் தான். அடுத்தவர்கள் வைத்திருக்கும் பர்ஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதோடு சரி. அதற்கு முக்கிய காரணம் வாங்கும் சம்பளம், வாங்கிய அன்றைக்கே காணாமல் போவது தான்.

கையில வாங்குனேன் பையில போடலே… காசு போண எடம் தெரியல என்று பாட்டு பாடியே நாட்களை நகர்த்திக் கொண்டு வருபவர்கள்

அப்படியே பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொண்டாலும் கூட, அதில் தேவைக்கு ஏற்ப பணம் வைத்திருப்பார்களா என்றால் கிடையாது.

வெறும் பந்தாவுக்காக மட்டுமே பர்ஸ் வைத்துக் கொள்வார்கள். அந்த பர்ஸும் சற்று கிழிந்ததாக இருக்கும். அந்த பர்சை திறந்து பார்த்தால் பணம் மட்டும் இருக்காது.

அதைத் தவிர மெடிக்கல் ஷாப் பில், ஒரு வருஷத்துக்கு முந்தி எடுத்த பஸ் டிக்கெட், அல்லது பழைய பஸ் பாஸ், ஒரு சினிமா டிக்கெட் என தேவையில்லாத ஐட்டங்களை மட்டுமே பர்ஸுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.

போனால் போகிறதென்று ஒரு கிழிந்த ஐந்து ரூபாய் நோட்டோ அல்லது ஒரு சில சில்லறை நாணயங்களையோதான் வைத்திருப்பார்கள்.

வெகு சிலர் மட்டுமே பர்ஸை முறையாக பயன்படுத்துபவர்களாக உள்ளனர். பர்ஸில் எப்போதும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக நிரம்பி வழியும்.

அந்த ரூபாய் நோட்டுக்களை அவர்கள் எடுக்கும் லாவகமே அலாதியானதாக இருக்கும். சிலருக்கு பர்ஸில் பணம் அவ்வப்போது வந்தாலும், வந்த சுவடு தெரியாமல் உடனடியாக கரைந்து விடும்

அதற்கு முக்கிய காரணம் பணத்தை முறையாக பர்ஸில் வைக்காமல், ஏதோ ஒரு அழுக்கு பையில் அழுக்கு துணிகளை திணிப்பது போல் திணித்து வைப்பார்கள்.

பணத்திற்கு மதிப்பளிக்காமல் ரூபாய் நோட்டுக்களை கசக்கி திணித்து வைப்பார்கள்.

அன்பளிப்பு
இவை அனைத்திற்கும் மேலாக நாம் வைத்திருக்கும் பர்ஸானது நம்முடைய கை காசை போட்டு வாங்கவே கூடாது

நம்முடைய மனதுக்கு பிடித்தமானவர் அல்லது அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என பிரியமானவர்கள் யாராவது வாங்கிக் கொடுத்த பர்ஸாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

அப்படி இருந்தால் தான் நம்முடைய பர்ஸில் பணம் நிரந்தரமாக இருக்கும். நம்முடைய வருமானமும் கூடும்.

எனவே, நம்முடைய பர்ஸில் பணம் சேரவேண்டுமானால் அன்பளிப்பாக கொடுத்ததாக இருந்தால் நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

நீங்களும் உங்க மனதிற்கு பிடித்தவர்களுக்கு மணிபர்ஸ் வாங்கி அன்பளிப்பாக கொடுங்க நிறைய பணம் சேரும்.

Related Articles

Back to top button