சமையல் குறிப்புகள்

வீட்டில் இருக்கவே கூடாத செடிகள் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் வீட்டில் சண்டை ஏற்படும். வீட்டில் தரித்திரம் உண்டாகும் கடன் மேல் கடன் அதிகரிக்கும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்.

வீட்டில் இருக்கவே கூடாத செடிகள்
வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் வீட்டில் சண்டை ஏற்படும். வீட்டில் தரித்திரம் உண்டாகும் கடன் மேல் கடன் அதிகரிக்கும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்.

வாஸ்து சாஸ்திரத்தில் மரங்கள், செடிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் குறிப்பிட்ட சில செடிகளை வளர்ப்பதால் மட்டுமே செல்வ வளம்,

வளர்ச்சி, முன்னேற்றம், பாசிடிவ் எனர்ஜியை பெற முடியும். ஆனால் அழகாக உள்ளது என நாம் கொண்டு வந்து வைக்கும் செடிகள், நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

வாஸ்து சாஸ்திரப்படி எந்த மாதிரியான செடிகள் மற்றும் மரங்களை வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு அருகிலும் வளர்க்கக் கூடாது, வளர விடக் கூடாது.

அவற்றால் என்ன கெடு பலன்கள் ஏற்படும் என சொல்லப்பட்டுள்ளது. இவற்றை தவறிக் கூட வீட்டில் வைத்து விடக் கூடாது.

துரதிர்ஷ்டம் தரக் கூடிய இந்த செடிகள் இந்திய வாஸ்து சாஸ்திரப்படி மட்டுமல்ல பல நாடுகளின் சாஸ்திர முறைப்படியும் ஒதுக்கப்பட்ட மரங்களாக உள்ளன.

வாஸ்து சாஸ்திரத்தில் செடிகள் :

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் அமைப்பு, திசை, வீட்டில் ஒவ்வொரு பொருட்களையும் வைக்கும் இடம் மற்றும் திசைகள் மட்டுமல்ல இன்னும் சில விஷயங்களும் நம்முடைய சந்தோஷம் மற்றும் நிறைவான, நிம்மதியான வாழ்க்கைக்கு காரணமாக அமைகின்றன.

வீட்டிற்கு சுற்றி அழகிற்காகவும், நிழலுக்காகவும் நாம் வைக்கும் சில மரங்கள் அல்லது செடிகள் கூட வாஸ்து பிரச்சனைகளை ஏற்படுத்தி,

வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

​பாதிப்பை ஏற்படுத்தும் செடிகள் :

இதனால் வீட்டில் செடி வைப்பதிலும் மிகவும் கவனமாக வைக்க வேண்டும். எல்லா செடிகளும் வீட்டில் வைப்பதற்கு ஏற்றதல்ல.

சில செடிகள் எதிர்மறை சக்திகளை உருவாக்கி, துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி விடும் என வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது.

அப்படி வீட்டில் வைக்கக் கூடாத செடிகள் அல்லது மரங்கள் எவை, அவற்றை வைப்பதால் வீட்டிலும், நம்முடைய வாழ்க்கையிலும் எந்த மாதிரியான பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்

வீட்டில் வைக்கக் கூடாத 7 செடிகள்..

வாஸ்து சாஸ்திரப்படி துளசி, மணி பிளான்ட் ஆகியன செல்வ தளத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரக் கூடியவை என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் வீட்டிற்குள் உள்ளும், வெளியிலும் சரி, அலுவலகத்திலும் சரி வைக்கக் கூடாத செடிகள் எவை என்பது பலருக்கும் தெரியாது.

அழகுக்காக என நினைத்து பெயரே தெரியாத பல செடிகளை வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து விட்டு, பிறகு பல வித பிரச்சனைகள், கெடு பலன்கள் அவற்றாலேயே பெறக் கூடிய நிலையை ஏற்பட்டு விடும்.

இவற்றை தவிர்ப்பதற்காக வீட்டில் கண்டிப்பாக வைக்கக் கூடாத, வளர்க்க கூடாத 7 மரங்கள் மற்றும் செடிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

​வாஸ்து படி வைக்க கூடாத செடிகள் …

1. முற்செடிகள் – ரோஜா தவிர மற்ற முற் செடிகளை வீட்டில் வைக்கக் கூடாது. சிலர் கண்திருஷ்டி என்று சப்பாத்திக்கல்லி போன்ற செடிகளை வீட்டில் வைப்பாளர்கள். இவைகள் வீட்டில் வைக்கக் கூடாத செடிகளாகும்.

2. போன்சாய் – வாஸ்து படி சிவப்பு நிற மலர்களைக் கொண்ட செடிகள் மற்றும் போன்சாய் மரங்களை வீட்டிற்கு உட்புறம் வைக்கக் கூடாது. இவற்றை வீட்டிற்கு வெளியே தோட்டத்தில் அல்லது திறந்த வெளியான இடங்களிலேயே வைக்க வேண்டும்.

3. புளி, மருதாணி -புளிய மரம் மற்றும் மருதாணி மரம் தீய சக்திகள் குடியிருக்கும் மரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டிற்கு அருகில் இந்த மரங்களை வைக்கக் கூடாது. இது கெடு பலன்களையே ஏற்படுத்தும்.

துரதிர்ஷ்டத்தை தரும் செடிகள் :

4. காய்ந்து போன செடிகள் – காய்ந்து, பட்டுப்போன இறந்த செடிகளையோ அல்லது மரங்களையோ வீட்டில் வைத்திருக்கக் கூடாது. காய்ந்த பூக்கள் உள்ள செடிகளும் துரதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தக் கூடியன.

5. கருவேலம் மரம் – கருவேல மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது. வீட்டிற்கு அருகில் கருவேல மரங்கள் இருப்பதும் தீய பலன்களையே ஏற்படுத்தும்.

6. பருத்தி செடி – பருத்தி, பருத்தி பட்டு செடிகள், பனை மரம் ஆகியவற்றையும் வீட்டில் வளர்க்கக் கூடாது. வீட்டை சுற்றி இந்த மரங்கள் இருப்பது அல்லது செடிகள் இருப்பது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

7. தொட்டி செடிகள் – சிறியதோ, பெரியதோ எதுவாக இருந்தாலும் தொட்டிச் செடிகளை வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பக்க சுவர்களுக்கு அருகில் வைக்கக் கூடாது. வீட்டின் கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் பெரிய மரங்களை வைப்பது நெகடிவ் எனர்ஜியை வீட்டில் அதிகரிக்க செய்யும்.

இந்த பதிவு https://tamil.samayam.com/ எனும் இணையதத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இந்த பதிவினை நீக்குவது எனின் எமது fmthadam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தெரிய படுத்துங்கள்.

Related Articles

Back to top button