Uncategorizedஆங்கிலம் பேசுவோம்

இந்த பொருட்களை யாரிடம் இருந்தும் வாங்காதீர்கள் வாங்கினால் வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்.

இந்த பொருட்களை யாரிடம் இருந்தும் வாங்காதீர்கள் வாங்கினால் வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படும் வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும்.

நம்மைச் சுற்றி நேர்மறையான ஆற்றல்களும் எதிர்மறையான ஆற்றல்களும் உண்டு.

எதிர்மறை ஆற்றல்கள் நம் வாழ்வில் சங்கடங்களை உண்டுபண்ணி தனது ஆற்றலைப் பிரதிபலிக்கும்.

ஆம் அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் அனைவரும் சாமர்த்தியமாக நம்மைக் காத்துக் கொள்ளல் வேண்டும்.

சில பொருட்களை நாம் தானமாகவோ அல்லது இலவசமாக எவரிடம் இருந்தும் வாங்கும் முன் இப் பொருளை வாங்கலாமா வேண்டாமா என்று சிந்தித்து செயலாற்ற வேண்டும். தாய் வீடாயினும் நாம் சிந்திக்க வேண்டும்.

முதலாவதாக, சர்க்கரை எனும் பொருள் வெள்ளை நிறத்தினாலானது. வெள்ளை நிறமானது சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த பொருள்ளாகும்.

அப்படிப்பட்ட சர்க்கரையை நாம் கடைகளில் பணம் கொடுத்துத் தான் வாங்க வேண்டும்.

யாரிடம் இருந்தும் இச் சர்க்கரையை இலவசமாக வாங்கும் வேளையில் நம் வீட்டிற்குச் செல்வம் வருதல் தடைப்படும்.

அடுத்து எண்ணெய், எந்த எண்ணெய் ஆயினும் அதனை காசு கொடுத்துத் தான் வாங்க வேண்டும். காரணம் எண்ணெய் ஆனது சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்தது.

நாம் எண்ணெய்யை இலவசமாக வாங்கும் வேளை நம் வீட்டில் சனிபகவான் ஆதிக்கம் அதிகரித்து பணவரவில் தடங்கல் ஏற்ப்படும்.

மூன்றாவதாக, இரும்பு சம்பந்தமான பொருட்கள் அனைத்துமே சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த பொருட்கள் தான்.

பூஜை அறையிலும் இரும்புப் பொருட்களையோ இருப்புத் தூபங்களையோ பயன்படுத்தக் கூடாது. நாம் எதிர் பாரா விதமாக இரும்புப் பொருட்களை இலவசமாக வாங்கி வீட்டிற்குள் கொண்டு வந்துவிடுவோம்.

உதாரணமாக தோசை கல்லை அயலரிடமோ அல்லது அம்மா வீட்டில் இருந்தோ கொண்டு வரும் வேளை சனி பகவான் ஆதிக்கத்தையும் நம் இல்லங்களில் ஊடுறுவச் செய்கின்றோம்.

எக் காரணம் கொண்டும் மேற்கூறிய மூன்று பொருளையும் இலவசமாகவோ தானமாகவோ வாங்காதீர்கள். பணம் கொடுத்து வாங்கி  உங்க வீட்டில் நேர்மறை ஆற்றலைப் பெருக்கி பணவரவை அதிகரியுங்கள்.

Related Articles

Back to top button