Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் இந்த விளக்கை 1 முறை மட்டும் இப்படி ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் இந்த விளக்கை 1 முறை மட்டும் இப்படி ஏற்றுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்த்து கொண்டே இருக்கும்

ஒருவனுக்கு வறுமையைப் போல்த் துன்பம் தருவது வேறேதும் இல்லை என்பர். வறுமை நிலையானது கடன் வாங்க விரும்பாதவனையும் கடனாளியாக்குகிறது.

இன்னும் சிலரை தர்மம் ஏந்தும் நிலைக்கே இட்டுச் செல்கின்றது. வறுமை ஆனது தலை விரிதாடும் முன்பு முளையிலேயே கிள்ளி எறிதல் வேண்டும்.

நம் வறுமை நிலை நீங்கி நாம் குடும்பத்துடன் மகிழ்வாக வாழ நம் வீட்டிற்கு மகாலட்சுமி கடாட்சம் வேண்டும்.

மகாலட்சுமியை நம் வீட்டிற்கு வரச் செய்து ஐஸ்வர்ய கடாட்சம் பெற ஓர் எளிய பரிகாரம் உண்டு.

தேவையான பொருள் மருதாணி இலை, 3 க்ராம்பு, 3 ஏலக்காய் மற்றும் கை நிறைய சில்லறை காசுகள்.

மருதாணி இலையானது மகாலட்சுமியின் அம்சமாகவே போற்றப்படுகின்றது.

அடிக்கடி பெண்கள் தங்கள் கைகளில் மருதாணி வைப்பார்கள் எனில் அவர்கள் சகல சௌபாக்கியங்களையும் அடைந்து கொள்வார்கள்.

உங்களுக்குக் கை ராசி வேண்டும் என நீங்கள் நினைத்தால் அடிக்கடி மருதாணியை கைகளில் இட்டுக் கொள்ளுங்கள்.

பரிகாரத்திற்கு உகந்த நாள் வியாழன் அல்லது வெள்ளி அல்லது பொர்ணமி தினமாகும். குறித்த தினங்களில் ஓர் சிறிய பித்தளை தட்டின் மீது மருதாணி இலைகளைத் தூவிக் கொள்ளுங்கள்.

பின்பு க்ராம்பு, ஏலக்காய் மற்றும் சில்லறை காசுகளை நிறைத்துக் கொள்ளுங்கள். தட்டினைச் சுற்றி வாசனை மலர்களையும் தூவிக் கொள்ளுங்கள்.

பின்னர் ஓர் மண் அகல் விளக்கினை எடுத்து நல்லெண்ணை அல்லது பசுந்நெய் இட்டு பஞ்சுத் திரியினை இட்டு குறித்த தட்டின் மீது வைத்து தீபம் ஏற்றி  மாகாலட்சுமி, குபேரனை வழிபடுங்கள்.

இப் பரிகாரமானது மாதம் ஒரு முறை செய்தாலே போதுமானது.
இவ்வாறு நீங்கள் மாதந்தோரும் கடைப்பிடித்து வர உங்கள் வறுமை நிலை நீங்கி உங்கள் குழந்தைகளும் நல்வாழ்வு அடைவார்கள்.

இன்னும் ஓர் எளிய செலவில்லாப் பரிகாரமானது கோமியத்தினாலானது. ஆம் அதிகாலையில் கிடைக்கும் மாட்டின் சிறுநீரையே கோமியம் என்போம்.

இக் கோமியத்தில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியினை இட்டு மாவிலை அல்லது வெற்றிலையினால் தினந்தோரும் காலையிலோ மாலையிலோ வீடு முழுவதும் தெளித்து, வீட்டினுள் சாம்பிராணி காட்டி வர உங்கள் வீடு தேடி மகாலட்சுமி குடி கொள்வாள்.

உங்கள் வறுமை நிலை நீங்கி உங்கள் இல்லங்களிலும் மனங்களிலும் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவிப்பாள் அம்பாள்

Related Articles

Back to top button