ஆன்மிகம்

பணம் மலை போல சேர ஐந்து மிளகினை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணம் மலை போல சேர ஐந்து மிளகினை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

ஐந்து மிளகுகளை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.

இந்த ஐந்து மிளகையும் வைத்து இரண்டு பரிகாரம் செய்யலாம். ஒன்று நீங்கள் கடனாக கொடுத்த பணம் திரும்ப உங்களிடம் சேரவும், இரண்டாவது நீங்கள் உங்கள் வாழிக்கையில் முன்னேறிச்செல்லும் போது ஏனையவர்களின் கண்திருஷ்டி உங்களிடமிருந்து நீங்கவும் இந்த பரிகாரங்களை செய்யுங்கள்.

முதலாவது கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்க இந்த ஐந்து மிளகை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்திற்கு உங்கள் பணத்தை உங்களிடம் திரும்ப கொண்டு வந்து சேர்க்கும் சக்தி உண்டு. முதலில் ஐந்து மிளகுகளை உங்கள் கையில் எடுங்கள்.

பின்னர் உங்கள் வீட்டு வாசலில் நில்லுங்கள். பின் கிழக்கு பார்த்த படி நின்று உங்கள் இஷ்ட தெய்வத்திடம் உங்கள் பணம் மீண்டும் உங்களிடம் வர வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

பின் அதில் நான்கு மிளகுகளை நீங்கள் நிற்கும் இடத்தில் இருந்து நான்கு திசைகளிலும் தூக்கி வீசுங்கள்.

ஐந்தாவது மிளகை நீங்கள் நிற்கும் இடத்தில் அவ்வாறே போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்குள் வந்து விட வேண்டும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் அந்த நாளில் நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும்.

இதை நம்பிக்கையுடன் செய்யுங்கள் உங்களிடம் யார் கடன் வாங்கினாய்களோ அவர்களே உங்களிடம் திரும்ப கொண்டு வந்து உங்கள் பணத்தை தருவார்கள்.

அடுத்து உங்கள் கண்திருஷ்டி நீங்க இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரத்தையும் ஐந்து மிளகுகளை வைத்து தான் செய்ய வேண்டும். முதலில் உங்கள் வீட்டு வாசலில் கிழக்கு திசை பார்த்தவாறு நின்று கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் கைகளில் ஐந்து மிளகுகளையும் வைத்துக்கொண்டு உங்கள் தலையை இடமியுந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றுங்கள். ஏழு தடவை இவ்வாறு செய்யுங்கள்.

பின்னர் முதல் பரிகாரத்தில் கூறியது போல இந்த பரிகாரத்திலும் நான்கு மிளகுகளை நான்கு திசையிலும் தூக்கி வீசுங்கள். பின் ஐந்தாவது மிளகை உங்கள் தலைக்கு மேலாக வானத்தை நோக்கி வீசுங்கள்.

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அல்லது பௌர்ணமி தினங்களில் செய்யுங்கள். ஆனால் இரவு ஆறு மணிக்கு பின்னர் தான் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் நம்பிக்கையுடன் செய்யுங்கள் உங்கள் கணதிருஷ்டி உங்களை விட்டு நீங்கும். முழு மனதோடு செய்யுங்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.

Related Articles

Back to top button