ஆன்மிகம்

வீட்டில் பண‌வரவு அதிகரிக்க இந்த பொருளை மட்டும் இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் பண‌வரவு அதிகரிக்க இந்த பொருளை மட்டும் இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

பணவசியம் உண்டாக வசம்பு பரிகாரம்.

உங்கள் வீட்டில் போதும் போதும் எனும் அளவிற்கு பணம் சேரவும் கடன் தீரவும் இந்த பரிகாரங்களை செய்யுங்கள். இந்த பரிகாரங்களை வசம்பை வைத்து செய்யுங்கள்.

இந்த வசம்பிற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. இந்த வசம்பை மாலை ஆறு மணிக்கு பின்பு பெயர் செல்லாதது என்பார்கள். அப்படி இதை பெயர் சொல்லி வாங்கினால் நீங்கள் செய்யும் பரிகாரத்திற்கு பலனற்றுப்போகும்.

முதலாவது பரிகாரத்திற்கு ஒரு தாள் நாணயமும் ஒரு வசம்பையும் எடுத்துக்கெள்ளுங்கள்.

இந்த தாள் நாணயம் எந்த எண்ணிக்கையாக இருந்தாலும் நல்லது. முதலில் தாள் நாணயத்தினுள் வசம்பை வைத்து சுருட்டுங்கள.

பின் அதை நூலால் கட்டிக்கெள்ளுங்கள். பின் அதை ஒரு கண்ணாடி போத்தலில் வைத்து அது வெளியில் தெரியாதவாறு சிலவறை நாணயங்களை அல்லது கல்லுப்பை போட்டு மறைத்துக்கொள்ளுங்கள்.

இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் பணவரவு அதிகமாகும். இதை பணம் வைக்கும் இடத்தில் மறைத்து வையுங்கள். இப்படி செய்வதால் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.

இதற்குள் வைத்த வசம்பை நீங்கள் சிலவறை நாணயங்களுள் வைத்தால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுங்கள்.

அதே நீங்கள் கல்லுப்பினுள் வைத்திருந்தால் அதை ஒரு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுங்கள். இதை நம்பிக்கையுடன் செய்யுங்கள் உங்கள் வீட்டில் பணத்திற்கு குறைவே இருக்காது.

இரண்டாவது பரிகாரம் . இதற்கு முதலில் ஒரு வெள்ளை நிற காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அதையும் எழுதி எவ்வளவு பணத்தொகை வாங்கினீர்களோ அதையும் எழுதுங்கள்.

பின் அதனுள் ஒரு வசம்பை வைத்து சுற்றிக்கொள்ளுங்கள். பின் இதை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் மறைத்து வையுங்கள்.

இதை பன்னிரண்டு நாட்கள் அப்படியே வையுங்கள். பின் பன்னிரண்டு நாட்களின் பின் அதை எடுத்து நெருப்பினுள் பேட்டு எரியுங்கள்.

பின் அதன் சாம்பலை எடுத்து சுத்தமான நீரில் கரைத்து கால் படாத இடத்தில் தூக்கி வீசுங்கள்.

இப்படி செய்வதால் உங்கள் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். இதை தொடர்ந்து ஐந்து முறை செய்தால் உங்கள் வீட்டிலுள்ள கடன் பிரச்சினைகள் தீரும்.

இந்த இரண்டு பரிகாரங்களையும் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் செய்யலாம்.

ஆனால் இதை செய்யும் போது உங்கள் வீடும் நீங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனைப்பெறுவீர்கள்.

Related Articles

Back to top button