இலங்கை செய்திகள்

பால்மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க அனுமதி..! வெளியான புதிய விலைகள்..!! திணறும் மக்கள்.!

பால்மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க அனுமதி..! வெளியான புதிய விலைகள்..!! திணறும் மக்கள்.!

பால்மா, கோதுமைமா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கை செலவுகள் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தீர்மானத்தை அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்க உத்தேசித்துள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கபெற்றால் மாத்திரமே இந்த நடைமுறை செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கை செலவுகள் குழு தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு யோசனை முன்வைத்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போதே எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- Lk Info

Related Articles

Back to top button