இலங்கை செய்திகள்

இலங்கையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

இலங்கையில் மருந்து
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.

 

பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கம் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது.

அதன்படி அவசர சத்திர சிகிச்சைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம் சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்த குருப்பு ஆராச்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள 200 தனியார் வைத்தியசாலைகளில் 76 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.

மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் தட்டுபாடு குறித்து சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவை ஒழுங்குப்படுத்தும் சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி – New Lanka

Related Articles

Back to top button