இலங்கை செய்திகள்

இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு – இன்று முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பம்.

இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு – இன்று முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பம்.

நாடளாவிய ரீதியில் மீண்டும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இலங்கை மக்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான நிபுணர் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, இன்றைய தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button