ஆன்மிகம்

ஒரு டம்ளர் தண்ணீரை இந்த திசையில் வைத்து நீங்கள் இப்படி செய்தால் போதும் பிறகு வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை தேடி வரும்..

ஒரு டம்ளர் தண்ணீரை இந்த திசையில் வைத்து நீங்கள் இப்படி செய்தால் போதும் பிறகு வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் உங்களை தேடி வரும்..

பணம் கொடுக்கும் தண்ணீரா! அது என்ன? என்று எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி இருக்கத்தான் செய்யும்.

பணவரவை கொடுக்கப்போகும் இந்த ஆற்றல் மிகுந்த தண்ணீரை எந்த நாளில் எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றிய முழு தகவலையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த தண்ணீரை தயார் செய்துவிட்டு நம்முடைய வீட்டில் வைத்துக் கொண்டால் நமக்கு தேவைப்படும் போதெல்லாம் இந்த தண்ணீரை பயன்படுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளலாம்

இந்த பரிகாரத்தை நாம் பௌர்ணமி அன்று தான் செய்யமுடியும்.

பௌர்ணமி நிலவில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றலை ஈர்த்து தான் இந்த அற்புதம் வாய்ந்த தண்ணீரை நாம் உருவாக்க போகின்றோம்.

பௌர்ணமி அன்று மாலை 6.30 மணிக்கு மேல் நிலவு வெளிச்சம் விழும் இடமாக பார்த்து ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அதாவது உங்கள் வீட்டு மொட்டை மாடி, பால்கனி இப்படி வானம் தெரியக்கூடிய எந்த இடமாக இருந்தாலும் சரிதான்.

கொல்லைப்புறமாக இருந்தாலும் அந்த இடத்தில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வெட்டவெளியாக இருக்கக்கூடிய இடத்தில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு முன்பாக ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரை வைத்து விடவேண்டும்.

அதற்குள்ளே மூன்று, 1 ரூபாய் நாணயங்களை போட்டுவிடுங்கள். அவ்வளவு தான்.

இந்த தண்ணீருக்கு முன்பு நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் அல்லவா.

உங்களுடைய கண்களை மூடி முதுகு தண்டு வடத்தை நேராக வைத்து இந்த பிரபஞ்சத்திடம் மனதார ‘எனக்கு பணம் வரும்

வருமானம் அதிகரிக்கும். மேலே மேலே சொத்துகள் சேர்க்கலாம்.

இப்போ நீங்க பணக்காரர் ஆகி விட்டீர்கள். சொத்து சுகம் சேர்த்து விட்டீர்கள். தங்க நகை வாங்கி விட்டீர்கள்.

கார் வாங்கிட்டீங்க’ இப்படி உங்களுக்கு எப்படி எல்லாம் பணக்காரராக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ அதை எல்லாம் நேர்மறையாக நினைத்து தியானம் செய்யுங்கள்.

பத்து நிமிடங்கள் சந்தோஷமாக நீங்கள் பணக்காரராக மாறிவிட்டதாக நினைத்து இந்த தியானத்தில் ஈடுபடவேண்டும்.

அந்த எனர்ஜி முழுமையாக அந்த தண்ணீரில் இறங்கி விடும்.

அவ்வளவுதான் 10 நிமிடம் கழித்து நீங்கள் அந்த இடத்தை விட்டு எழுந்து விடலாம்.

ஆனால் அந்த தண்ணீர் மட்டும் வெட்டவெளியில் இரண்டு மணி நேரம் வரை பத்திரமாக அப்படியே திறந்தபடியே இருக்கட்டும்.

பௌர்ணமி நிலவொளியில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றல், இந்த பிரபஞ்சம் முழுதும் பரவியிருக்கும் அல்லவா, அந்த அத்தனை ஆற்றலும் அந்த தண்ணீரிலும் இரங்கி விடும்.

கூடவே உங்களுடைய நேர்மறையான எண்ணமும் அந்த தண்ணீரில் சேர்ந்திருக்கும்.

இரண்டு மணி நேரம் கழித்து இந்த தண்ணீரை உள்ளே போட்டிருக்கும் நாணயத்தோடு ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீரை கொஞ்சமாக நீங்கள் தினமும் குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி கலந்து குளிக்கலாம்.

பணம் வைக்கும் பெட்டியில் தெளித்து விடலாம். திடீரென்று ஏதோ ஒரு பண கஷ்டம் வந்துவிட்டது.

பணம் தேவை எனும்போது இந்த தண்ணீரை எடுத்து கொஞ்சமாக வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் தெளித்துவிட்டு பணம் வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திலும் கேளுங்கள்.

ஏதாவது ஒரு வகையில் பணக் கஷ்டத்தை தீர்ப்பதற்கு பணம் கிடைத்துவிடும்.

நம்ப முடியவில்லையா. நீங்கள் முயற்சி செய்து தான் பாருங்களேன். அடுத்த பௌர்ணமி வரும்வரை இந்த தண்ணீரை வைத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மீண்டும் பௌர்ணமி வரும் போது, மீண்டும் ஆற்றல் மிகுந்த தண்ணீரை இதே போல நாம் தயார் செய்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

பழைய தண்ணீர் இருந்தால் அதை செடியில் ஊற்றி விடலாம்.

நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக நீங்களும் ஒரு நாள் பணக்காரர் ஆவீர்கள் என்ற உறுதியோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

நன்றி , மலையொளி

Related Articles

Back to top button