ஆன்மிகம்

வறுமையை அதிகரிக்கும் குபேரன் !! குபேரன் சிலையை இந்த திசையில் வைத்து தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீங்க இப்படி செய்தால் வீட்டில் வறுமை மேல் வறுமை ஏற்படும்.

வறுமையை அதிகரிக்கும் குபேரன் !! குபேரன் சிலையை இந்த திசையில் வைத்து தப்பி தவறி கூட இந்த தவறை செய்யாதீங்க இப்படி செய்தால் வீட்டில் வறுமை மேல் வறுமை ஏற்படும்.

வீட்டிலும், வேலை செய்யும் இடங்களிலும் குபேரர் சிலையை வாங்கி வைப்பது வாஸ்து படி மிக நல்ல விஷயமாகும்.

இது எதிர்மறையை சக்திகளை அதிகரித்து, தெய்வீக சக்தியை அங்கு பரவ செய்யும் தன்மை கொண்டதாகும்.

குபேரர் சிலையை வைத்து வழிபடுவதற்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் உகந்ததாகும்.

இந்த நாட்களில் குபேருக்குரிய ஸ்லோகங்கள் அல்லது மந்திரங்களை 108 முறை உச்சரித்து வருவது குபேரரின் அருளை பெற்றுத் தரும்.

ஆன்மிக ரீதியாகவும், வாஸ்து சாஸ்திர ரீதியாகவும் குபேரர் சிலை வைப்பது என்பது சிறப்பான பலனை தரக் கூடியதாகும்.

குபேரர் சிலை செல்வ வளம், மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது. குபேரர் யந்திரத்தை வீட்டில் வாங்கி வைத்து வழிபடுவது நன்மை தரும்.

இந்த குபேர யந்திரத்திற்கு பணத்தை வேகமாக ஈர்க்கும் தன்மை உண்டு. 72 என்பது குபேரருக்குரிய எண்ணாகும்.

அதனால் 72 கட்டங்களைக் கொண்ட குபேர யந்திரத்தை வீட்டின் வட திசையில் வைப்பது நன்மையானதாகும்.

பல வகையான குபேரர் சிலைகள் வீட்டிலும், கடைகளிலும், அலுவலகங்களிலும் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம்.

குபேரர் செல்வத்திற்கு அதிபதி, குபேரரின் சிலை அல்லது படத்தை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டால் அது செல்வ வளத்தை தரும் என்பது ஐதீகம்.

குபேரர் சிலையை வீட்டில் வைப்பது வாஸ்து சாஸ்திரப்படியும், பல விதமான பிரச்சனைகளை தீர்க்கும் சிறந்த பரிகாரமாகும். குபேரர் சிலை வைப்பதற்கு வீட்டில் வடகிழக்கு திசை மிகவும் ஏற்றதாகும்.

அதே போல் எந்த வடிவத்தில் இருக்கும் குபேரர் சிலையை வைத்தால் நமக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

குபேரர் சிலை வகைகளும், பயன்களும் :

நிற்கும் குபேரர் :

நின்ற கோலத்தில் சிரித்தபடி இருக்கும் குபேரர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வ வளமும், மகிழ்ச்சியும் வீட்டில் எப்போதும் குறைவில்லாமல் இருந்து கொண்டே இருக்கும்.

அமர்ந்த குபேரர் :

பெரும்பாலும் குபேரர் அமர்ந்த நிலையிலேயே சிலைகள் இருக்கும். கால்களை மடித்து, தனது பெரிய வயிற்றை காட்டிய படியும், சிரித்த படியும் குபேரர் சிலைகளை வீட்டில் வைப்பது மிகவும் நல்லது. இதில் வீட்டில் சமநிலை, நல்லிணக்கம், நிலையான தன்மையை இருக்க வைக்கும்.

சயன கோலத்தில் குபேரர் :

லேசாக படுத்த நிலையில் சயனித்துக் கொண்டு சிரித்த படி இருக்கும் குபேரர் சிலைகள் இருப்பது மிக அரிதானது. இது அமைதி, ஓய்வு, சுகம் ஆகியவற்றை குறிக்கும் அடையாளமாகும்.

சிரிக்கும் குபேரர் :
கையில் ஜப மாலையுடன் சிரித்தபடி இருக்கும் குபேரர் ஞானம், அறிவு, ஆன்ம ஒளியின் அடையாளமாகும். இந்த மாதிரியான குபேரர் சிலைகளை வீட்டிலோ, அலுவலகத்திலோ வாங்கி வைத்தால் உங்களின் கனவுகள், லட்சியங்களை அடைய அது துணையாக இருக்கும்.

மூட்டை குபேரர் :

முதுகில் செல்வ மூட்டையை சுமந்த படி இருக்கும் குபேரர் சிலையை செல்வ வளத்தின் அடையாளமாகம். இந்த வகையான குபேரர் சிலையை தொழில் அல்லது வேலை செய்யும் இடங்களில் வைத்தால் நிலையான வளர்ச்சி, செல்வ வளம் பெருக துணை செய்யும்.

தங்க நிற குபேரர் :

தங்க நிற முலாம் பூசப்பட்ட குபேரர் சிலை அதிர்ஷ்டம் மற்றும் செல்வ வளத்தின் அடையாளமாகும். நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும் என நினைப்பவர்கள் தங்க நிறத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் குபேரர் சிலையை வேலை செய்யும் இடங்களில் வாங்கி வைக்கலாம்.

​விசிறி குபேரர் :
கையில் விசிறி வைத்தபடி, சிரித்துக் கொண்டிருக்கும் குபேரர் சிலை அதிர்ஷ்டம் மற்றும் அதிகப்படியான செல்வ வளத்தின் அடையாளமாகும். அதோடு ஆரோக்கியத்தையும் தரக் கூடியதாகும்.

செல்வ வளம், ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையை பெற வேண்டும் என்பவர்கள் இது போன்ற சிலைகளை வீடுகளில் வாங்கி வைக்கலாம்.

கைகளை தூக்கிய குபேரர் :

இரண்டு கைகளையும் மேலே தூக்கியபடி, சிரித்துக் கொண்டு, கையில் பணம் நிறைந்த கிண்ணம் ஒன்றை ஏந்தி இருக்கும் குபேரர் சிலை அனைத்து விதமான நலன்களையும் தரக் கூடியதாகும்.

பொருளாதாரம் அல்லது தனிப்பட்ட விருப்பங்கள் அனைத்திலும் வெற்றியை தரக் கூடியதாகும். இது வாழ்வில் உங்களை உயர செய்வதன் அடையாளமாகும். உங்களுக்கு அதிகப்படியான அதிர்ஷ்டத்தை தந்து, உங்களின் தரத்தை பல மடங்கு அதிகரிக்க செய்வதாகும்.

​தவளை குபேரர் :
பணத்தை தாங்கி வரும் தவளையின் மீது குபேரர் சவாரி செய்வது போன்ற சிலை தொழிலில் நல்ல அதிர்ஷ்டம், செல்வ வளம் ஆகியவற்றை பெற்றுத் தரக் கூடியதாகும்.

அதிலும் கையில் பண மூட்டை, செல்வம் நிறைந்த பாத்திரம், ஜப மாலை ஆகியவற்றையும் வைத்துக் கொண்டு தவளையில் சவாரி செய்யும் குபேர் கூடுதல் சிறப்பான பலனை தரக் கூடியவர்.

பாத்திரம் ஏந்திய குபேரர் :

கையில் பாத்திரம் ஏந்திக் கொண்டு சிரித்த படி இருக்கும் குபேரர் சிலை, நல்ல உடல் திறன், உடல் மற்றும் ஆன்மிக பலத்தை அதிகரிக்கக் கூடியதாகும்.

இது நல்ல ஆரோக்கியத்தையும், அதிகமான செல்வ வளத்தையும் தரக் கூடியதாகும்.

குழந்தைகளுடன் குபேரர் :

குழந்தைகளுடன் குபேரர் இருப்பது போன்ற சிலை மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த சிலையை வீட்டில் வாங்கி வைத்தால் குழந்தைப் பேறு, செல்வ வளம், அதிர்ஷ்டம் ஆகியவை ஏற்படும்.

நன்றி.
tamil.samayam.com

Related Articles

Back to top button