வெளிநாட்டு செய்திகள்

கனடாவில் குடியேற தமிழர்களுக்கு கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பு..

கனடாவில் குடியேற தமிழர்களுக்கு கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பு..

கனடாவில் தமிழர்கள் இலகுவாக குடியேற வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக பிராம்ப்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்
கனடாவிற்கு வர விரும்பும் எந்த தமிழ் குடும்பமும், குடியேறுவதற்கான வழியை திறந்து விடுவேன் என்று, கனடாவின் கொன்சர்வேடிவ் கட்சித் தலைமைப் போட்டியில் இறங்கியுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள தமிழ் சமூகத்தினருடன் பட்ரிக் பிரவுன் நடத்திய கலந்துரையாடலின் பொது இந்தத் தகவல்களை வெளியிட்டதாக ரொறன்ரோ ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வாக்குறுதியை வழங்கும், சிறியதொரு காணொளி தமக்கு கிடைத்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் அமுலிலுள்ள விடுதலைப் புலிகளை, மீதான தடையை நீக்குவதாகவும், அவர் இதன் போது உறுதியளித்துள்ளார்.

உக்ரேனியர்கள் அல்லது வியட்நாமிய படகு அகதிகளைப் போல, தமிழ் அகதிகளுக்கு கனடா உதவ தவறியதற்கு மன்னிப்பு கோருவேன் என்றும் பட்ரிக் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.

கொன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவியை வெல்வதற்கு, தமிழ் சமூகப் பிரதிநிதிகளின் உதவியை அவர் கோரியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை போட்டவர்கள் தான் அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும், அவர் அந்த காணொளியில் குறிப்பிடுவதாகவும் ரொறன்ரோ ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி – New Lanka

Related Articles

Back to top button