இலங்கை செய்திகள்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, புதன்கிழமை காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது குறித்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button